முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: அவிட்டம்- 2.
செவ்வாய்: ரோகிணி- 3.
புதன்: உத்திராடம்- 3.
குரு: உத்திரட்டாதி- 4.
சுக்கிரன்: பூரட்டாதி- 2.
சனி: அவிட்டம்- 3.
ராகு: பரணி- 1.
கேது: சுவாதி- 3.
கிரக மாற்றம்:
மாசி 1 (13-2-2023) கும்ப சூரியன் (காலை 9.45).
மாசி 3 (15-2-2023) மீன சுக்கிரன் (இரவு 8.02).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
13-2-2023 இரவு 8.37 மணிக்கு விருச்சிகம்.
15-2-2023 இரவு 12.45 மணிக்கு தனுசு.
18-2-2023 அதிகாலை 1.48 மணிக்கு மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 10-ல் புதன், திங்கட்கிழமைமுதல் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீராமலிருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது சாதகமான முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடி, பொருட் தேக்கங்கள் மறைந்து பிறர் ஆச்சரியப்படுமளவுக்கு உயர்வான நிலையை அடைவீர்கள். வேலையாட்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் திறமைகளை வெளிக்காட்டமுடியும். மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் எளிதில் செய்துமுடிப்பீர்கள். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனைசெய்வது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 9, 10-ல் சஞ்சரிப்ப தால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். ஜென்ம ராசிக்கு 6-ல் கேது, 11-ல் குரு சஞ்சரிப்பதால் பணப் பரிமாற்ற விஷயங்களில் சிறப்பான பலன்கள் கிடைத்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் காப்பாற்றும் பலமுண்டா கும். நெருங்கியவர்களால் ஆதாயங்களைப் பெறுவீர் கள். திங்கட்கிழமை முதல் சூரியன் 10-ல் சஞ்சரிப்ப தால் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாகி போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளைப் பெறமுடியும். தொழில் அபிவிருத்திக்காக நவீன கருவிகளை வாங்குவீர்கள். வியாபாரரீதியாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும், அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்கள் சாதகமாக இருப்பதால் நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் பணிபுரியமுடியும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் பரிபூரண வெற்றிகிடைக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 8-ல் சஞ்சரிப்பதாலும், விரய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது, ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. தற்போது ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் வரும் திங்கட்கிழமைமுதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் ஓரளவுக்குக் குறைந்து சகலவிதத்திலும் படிப்படியான முன்னேற்றங் களைப் பெறுவீர்கள். உடல்ரீதியான தொந்தரவு கள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர்த் தொடர்புகள்மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். நீண்டநாளைய கடன்கள் சற்று குறைந்து மன அமைதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் பல இருந்தாலும் வேலையாட்கள் ஆதரவாக இருப்பதால் எதிலும் சிறப்பாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். காலநேரம் பார்க்காமல் பணிபுரிந்தால் விரைவில் ஒரு உயர்வான நிலையை அடையமுடியும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களுக்கும் பரிபூரணமான வெற்றி கிடைத்து மகிழ்ச்சியுண்டாகும். மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனைசெய்வது நன்மை தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 7-ல் புதன், 9-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகத் திருப்தி கரமாக இருந்து தேவைகள் பூர்த்தி யாவதுடன் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுடைய அனைத்து செயல்களுக்கும் சிறப் பான ஆதரவு கிடைக்கும். பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். திங்கட்கிழமைமுதல் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்புண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப் பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சிறப் பாக செய்துமுடிப்பீர்கள். பொருளாதாரரீதியாகவும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு உங்களுக்கிருந்த நெருக்கடிகள் அனைத்தும் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றா லும், அதிகாரியிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பதால் எதையும் எளிதில் சமாளிக்கமுடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உங்களுடைய நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன் திங்கட்கிழமை முதல் 7-ல் சனி சேர்க்கைபெற்று சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பென்பதால், நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடு ஏற்படுமென்பதால் வாக்குவாதங்களைத் தவிர்த்து பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். தனகாரகன் குரு 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும். எனவே ஆடம்பர செலவுகளைக் குறைத்து சிக்கனத்துடன் செயல்படுவது, கையிருப்பைக் கொண்டு செலவுசெய்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒருசிலரது செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகக் கையாண்டால் வீண் இழப்புகளைத் தவிர்த்து லாபங்களை அடையமுடியும். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் சில பணிகளை எளிதில் செய்து முடிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாய் ராசிக்கு 10-ல் இருப்பதால் எதையும் எதிர் கொள்ளும் வலிமை உண்டாகும். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூல மாக சஞ்சரிப்பதால், புதிய முயற்சிகளை மேற்கொண்டால் பரிபூரண வெற்றி கிடைக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலைசாற்றி நெய் தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 5-ல் சஞ்சரிப்பதாலும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதா லும், திங்கட்கிழமைமுதல் சூரியனும் 6-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் உங்களது வலிமை அதிகரிக்கும். மதிப்பு மிகுந்த பதவிகள் உங்களைத் தேடிவரும். கொடுத்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்றுவீர்கள். வம்பு, வழக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடி மகிழ்ச்சியுண்டாகும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படுமென்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் எதையும் எளிதில் சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு தற்போது நல்ல விடிவுகாலம் பிறந்து சிறப்பான லாபங்களைப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்யும் வாய்ப்புகளும், நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டமும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள பாக்கிகள் கிடைக்கும் வாய்ப்புகள், பதவி உயர்வு கிடைக்கும் யோகம் ஏற்படும். புதிய வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனத்திலிருந்து அழைப்புவரும். செவ்வாய், புதன் கிழமைகளில் சந்திரன் சஞ்சாரம் சிறப் பாக இருப்பதால் நல்ல பணவரவுகள் ஏற்பட்டு ஆடம்பரத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளமுடியும். பிரத்தியங்கரா தேவி வழிபாடு, விநாயகரை தரிசிப்பதன்மூலம் கெடுதிகள் குறையும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். நியாயப்படி உங்களுக் குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளும் தடைப்படும். பொருளாதாரரீதியாக நெருக்கடியான நேரமென்பதால் எதிலும் சிக்கனமாக இருக்கவேண்டும். வரவுக்குமீறிய செலவுகள் ஏற்பட்டு சேமிப்புகள் குறையும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்காது. எதிலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் ஒருசில பிரச்சினைகளை சமாளிக்க முடியும். புதன் 4-ல் சஞ்சரிப்பதாலும், திங்கட்கிழமைமுதல் சூரியன் 5-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து நெருக்கடிகள் சற்று குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். எவ்வளவு கடினமான பணிகளையும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில், பிரதான கிரகங்கள் சாதகமற்றிருந்தாலும் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் பலம், எதிர்பாராத பணவரவுகளை அடையும் அதிர்ஷ்டங்கள் உண்டு. சிவன் தலங் களுக்குச் சென்றுவருவது, துர்க்கைக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் பொருளாதாரநிலை மிகவும் சாதகமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் சாதகமான பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் இந்த வாரத்தில் 4, 5-ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் அனுகூலங்கள், நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். சூரியன் திங்கட்கிழமை முதல் 4-ல் சஞ்சரிப்பதாலும், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் வீண் அலைச்சல், ஒருசில காரியங்கள் தாமதமாகும் நிலை ஏற்படும். முடிந்தவரை பயணங்களைக் குறைத் துக்கொள்வது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்துச்சென்றால் நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி எந்தவொரு விஷயத்திலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் முன்னேற்றத்திற்காக வெளிநபர் களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் கௌரவமான நிலையும், எடுத்த வேலையைக் குறித்த நேரத்தில் செய்துமுடிக்கும் ஆற்றலும் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் பொறுமையோடு நடந்துகொள்வது நல்லது. செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு விருப்பங்கள் நிறைவேறும் யோகமுண்டு. சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, முருகவழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள். தற்போது 2-ல் சஞ்சரிக்கும் சூரியன் திங்கட்கிழமைமுதல் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால், உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி சகலவிதத்திலும் ஏற்றங்களைப் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைத்து, நீண்டநாட்களாகத் தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். சனிபகவான் 3-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் அனுகூலமான பலன்கள் ஏற்பட்டு கடன்கள் எல்லாம் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது மட்டுமல்லாமல் சட்டரீதியான சிக்கல்கள் படிப்படியாகக் குறையும். வெளியூர்த் தொடர்புகள்மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைத்து தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் உடன் பணிபுரிபவர்களிடம் நிலவும் கருத்து வேறுபாடுகள் முழுமையாக மறைந்து நிம்மதி உண்டாகும். குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கமுடியும். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மகிழ்ச்சிதரும் இனிய செய்திகள் உங்களைத் தேடிவரும். மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நன்மை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடி, எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமத மாகும் நிலையுண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் திங்கட்கிழமைமுதல் 2-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்தவும். சிறு பாதிப்பென் றாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்கமுடியும். வேலையாட்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். ஒவ்வொன்றிலும் நீங்களே நேரடியாக இருந்து செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். புதிய வேலை தேடுபவர்கள் இருக்கும் வேலையைத் தக்கவைத்துக்கொள்வது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களையும், இரவுநேரப் பயணங்களையும் தவிர்க்கவும். பங்காளிவகையில் வீண் கருத்து வேறுபாடு ஏற்படும் நேரமென்பதால் கவனமாக இருப்பது உத்தமம். இந்த வாரத்தில் பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனிக்கிழமையில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து, எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்று.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத் தில் மகிழ்ச்சி, பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். நெருங்கியவரின் ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறைந்து ஆதாயங்களை அடைவீர்கள். முயற்சிகளில் முழுமையான வெற்றி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சியேற்படும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரும் இனிய நிகழ்வுகள் நடக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். திங்கட்கிழமைமுதல் சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், இருப்பதை அனுபவிக்கமுடியாத அளவுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். முடிந்தவரை நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எந்தவொரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் நிதானத்துடன் செயல்படவும். வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்த்து பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து போட்ட முதலை எடுக்கமுடியும். எனினும் வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப் பாக இருக்காது. தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படும் வாய்ப்புகள் இருந்தாலும், அதிகாரிகள் நெருக்கடிகளால் நிம்மதியிருக்காது. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் செய்யக்கூடிய அனைத்து செயல்களுக்கும் முழுமையான அனுகூலங்கள் கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடையும் வாய்ப்புண்டு. ஜென்ம ராசியில் குரு, திங்கட்கிழமைமுதல் சூரியன் 12-ல் சஞ்சரிக்கவிருப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் நெருக்கடிகள், நெருங்கியவர்களால் நிம்மதிக்குறைவுகள் ஏற்படும். சக்திக்குமீறிய செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமாகும். ராகு 2-ல் இருப்பதால் பேச்சில் கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் தான் அனுகூலங்களைப் பெறமுடியும். கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வதன் மூலம் நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். சட்டரீதியாக சில சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் எதையும் பொறுமையோடு கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் அதற்கான ஊதியம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். பொதுவாக எதிலும் சற்று பொறுமையோடு இருந்தால் விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் ராசிக்கு சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு கஷ்டங்கள் குறையும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.
ப்